கட்டார் இராச்சியத்திலுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கு வலயத்தில் நிலவும் அமைதியற்ற சூழல் காரணமாக கட்டாரிலுள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் இந்த சவால்மிக்க காலத்தில் கூடுதல் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென கட்டாரிற்கான இலங்கை தூதுவர் சித்தாரா கான் தெரிவித்துள்ளார்.
நிதானத்துடன் செயற்படுதல், பொறுப்புடன் இருத்தல், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இடங்களிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுதல் உள்ளிட்ட விடயங்களில் கட்டார் அரசு விடுக்கும் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிமுறைகளை பின்பற்றுமாறு இலங்கையர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
