வாகன இலக்கத் தகடு : புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

Date:

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் இன்று (10) கையெழுத்திடப்பட்டது.

இந்நிகழ்வில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம், வீதிப் போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையினர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க, ஒப்பந்தத்தின்படி குறித்த நிறுவனம் மூன்று மாதங்களுக்குள் இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

இந்த ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நீண்ட காலம் எடுத்ததாகவும், அமைச்சரவையின் அனுமதி மற்றும் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் இது கையெழுத்திடப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இருப்பினும், குறித்த நிறுவனத்துடன் நடத்தப்பட்ட முதற்கட்டப் பேச்சுவார்த்தைகளின்படி, இரண்டு மாத காலத்திற்குள் இப்பணிகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டம் சுமார் 3 பில்லியன் ரூபா பெறுமதியானது எனவும், இன்று முதல் ஐந்து ஆண்டுகாலத்திற்கு அந்த நிறுவனத்திற்கு இது வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக, முடிந்தவரை...

நெதன்யாகு எங்கே? இஸ்ரேல் பிரதமர் குறித்து பரவும் மர்மம்: ஈரான் ஊடகம் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்திருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்ற யூகங்கள்...

பல்துறை அறிஞர் பேராசிரியர் நகீப் அத்தாஸ் மறைந்தார்.!

பொதுவாக அறிவுலகத்திற்கும், உலக முஸ்லிம் சமூகத்திற்கும் பெரும் அறிவுப் பங்களிப்பை வழங்கிய...

நீர்கொழும்பு, கட்டான பகுதிகளில் நீர்வெட்டு

நீர்கொழும்பு மற்றும் கட்டான ஆகிய பகுதிகளில் நாளை மறுதினம் (12) முற்பகல்...