பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

Date:

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பார்வையிட்டார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பிற்கிணங்க பிரதமர் பிலிப்பைன்சின் மனிலா நகரிற்கு விஜயம் செய்துள்ளார்.

இதற்கமைய லொஸ் பெனோஸ் நகரிலுள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிட்ட பிரதமர் அதன் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இலங்கை நெற் செய்கை விவசாயிகள் முகம்கொடுக்கும் சவால்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் நெல் விளைச்சலை அதிகரித்தல் மற்றும் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நவீன தொழில்நுட்பங்கள் உட்பட ஆராய்ச்சி ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதன் சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்...