சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த மாத இறுதியில் இலங்கைக்கு வருகை தரவுள்ளது.
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கும் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் 6 ஆவது கடன் தவணையை விடுவிப்பதற்கு முன்னதாக நடத்தப்படும் மீளாய்வு பேச்சுவார்த்தைகளுக்காகவே அவர்கள் வருகை தரவுள்ளதாக நிதிப் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது குறித்த மேலதிக விபரங்கள், சர்வதேச நாணய நிதியம் இதுவரை 05 கடன் தவணைகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
நாட்டின் பொருளாதாரச் செயற்பாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக மீளாய்வு செய்யப்படும்.
இந்த மீளாய்வைத் தொடர்ந்து, ஆறாவது கடன் தவணையை விடுவிப்பது தொடர்பான அவசியமான உடன்பாடுகள் எட்டப்படும் என கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
