நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை மே மாதம் வரை நீடிக்கும்

Date:

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை மே மாதம் வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

குறைந்த காற்றின் வேகம் மற்றும் சீரற்ற காற்றை கொண்ட முதல் இடைப்பருவ காலத்தில் நாடு தற்போது உள்ளது எனவும் இதுவே வெப்பம் அதிகரிக்க காரணம் எனவும் வளிமண்டலவியல் திணைக்கத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன தெரிவித்துள்ளார்.

காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரையிலான நேரமே மிகவும் வெப்பமான நேரம் என்றும், இந்த நேரத்தில் பொதுமக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளுமாறும் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதனால் மக்கள் நீரேற்றத்துடன் இருக்கவும், வெளிர் நிற ஆடைகளை அணியவும், வெயிலில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்க்கவும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வெப்பம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களுள் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அடங்குவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி: பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கிய மத்திய வங்கி

நிதி அமைச்சுக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மோசடிப்...

அடுத்த இரண்டு நாட்களுக்கும் மழை தொடரும்

குறைந்த காற்றழுத்தப் பகுதி அடுத்த 48 மணித்தியாலத்தில் தீவிலிருந்து விலகிச் சென்று...

உயிர் காக்க உதவுவோம்: 9 வயது சிறுமியின் புற்றுநோய் சிகிச்சைக்காக அவசர உதவி கோரிக்கை

ஹெம்மாதகமவைச் சேர்ந்த  ஹஸ்மியான் மற்றும் டாக்டர் ரஷீதா தம்பதிகளின் 9 வயது...

நாட்டில் யானைக்கால் நோயாளிகள் அடையாளம்!

கடந்த ஆண்டில் நாட்டில் 68 யானைக்கால் நோய் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக யானைக்கால்...