ஏப்ரல் 1 முதல் மின்சாரக் கட்டணத்தில் மாற்றம்!

Date:

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களைத் திருத்தம் செய்வதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது. இந்த மின்சாரக் கட்டணத் திருத்தம் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்.

மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட 13.56% கட்டண அதிகரிப்பு யோசனைக்கு அமைவாக, திருத்தப்பட்ட புதிய கட்டண விபரங்கள் வருமாறு:

  • 0 – 30 அலகுகள்: 4.3% அதிகரிப்பு (மாதாந்தக் கட்டணம் 15 ரூபாவால் உயர்வு).

  • 31 – 60 அலகுகள்: 6.9% அதிகரிப்பு (மாதாந்தக் கட்டணம் 45 ரூபாவால் உயர்வு).

  • 61 – 91 அலகுகள்: 6.9% அதிகரிப்பு.

  • 91 – 180 அலகுகள் (மூன்று பிரிவுகள்): 7.2% அதிகரிப்பு.

  • 180 அலகுகளுக்கு மேல்: 25% அதிகரிப்பு.

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான இந்த மின்சாரக் கட்டணத் திருத்த யோசனையை இலங்கை மின்சார சபை கடந்த பெப்ரவரி 13 ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பாடசாலைகளுக்கு வாரத்திற்கு 4 நாட்கள் மாத்திரம் அனுமதி!

உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், பாடசாலைகளின் நிர்வாகம் மற்றும் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளைத்...

அடையாளம் தெரிந்தும் இலக்கு வைக்கப்பட்ட ஊடக வாகனம்: பெண் ஊடகவியலாளர் பாத்திமா படூனி படுகொலை!

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 'அல் மயாடீன்' செய்தி...

36 வருடங்களின் பின் குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மனிதப்...

தினமும் பல மணிநேரங்களுக்கு நீர் விநியோகத்தில் தடை

நாட்டில் தற்சமயம் நிலவும் வறட்சியமான மற்றும் குறைந்த மழை வீழ்ச்சிப் பதிவு...