ஏப்ரல் 1 முதல் மின்சாரக் கட்டணத்தில் மாற்றம்!

Date:

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களைத் திருத்தம் செய்வதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது. இந்த மின்சாரக் கட்டணத் திருத்தம் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்.

மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட 13.56% கட்டண அதிகரிப்பு யோசனைக்கு அமைவாக, திருத்தப்பட்ட புதிய கட்டண விபரங்கள் வருமாறு:

  • 0 – 30 அலகுகள்: 4.3% அதிகரிப்பு (மாதாந்தக் கட்டணம் 15 ரூபாவால் உயர்வு).

  • 31 – 60 அலகுகள்: 6.9% அதிகரிப்பு (மாதாந்தக் கட்டணம் 45 ரூபாவால் உயர்வு).

  • 61 – 91 அலகுகள்: 6.9% அதிகரிப்பு.

  • 91 – 180 அலகுகள் (மூன்று பிரிவுகள்): 7.2% அதிகரிப்பு.

  • 180 அலகுகளுக்கு மேல்: 25% அதிகரிப்பு.

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான இந்த மின்சாரக் கட்டணத் திருத்த யோசனையை இலங்கை மின்சார சபை கடந்த பெப்ரவரி 13 ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தது.

Popular

More like this
Related

வித்தியா கொலை வழக்கின் தண்டனை கைதி தற்கொலை

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை நியமிக்கப்பட்ட...

ஹஜ் யாத்திரை குறித்து பிரதி அமைச்சர் முனீர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

இம்முறை ஹஜ் யாத்திரையில் பங்கேற்கும் இலங்கை யாத்திரிகர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும்...

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி ஆரம்பம்: பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக மழை

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி நாடு முழுவதும் கட்டம் கட்டமாக நிலைகொண்டு வருவதால் நாட்டின்...