நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகலில் மழைக்கு சாத்தியம்!

Date:

நாட்டின் பல பகுதிகளில் இன்று (3) மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2:00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

அரச செலவுகளை முகாமைத்துவம் செய்ய சுற்றுநிரூபம்!

மத்திய கிழக்கு  போர்ச் சூழலினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தணித்து,...

“ஹார்முஸ் நீரிணை ஈரான் ஒத்துழைப்புடன் மட்டுமே திறக்கப்பட வேண்டும்”: பிரான்ஸ் ஜனாதிபதி

சர்வதேச வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் பிரான்ஸ்...

மக்காவில் உள்ள ராபிதாவின் அனுசரணையில் உயர்கல்வி கற்ற இரட்டை சகோதரிகளுக்கு உயர்தரப் பரீட்சையில் மிகச்சிறந்த பெறுபேறுகள்

இம்ரான் ஜமால்தீன் பணிப்பாளர், ராபிதாவுக்கான (MWL) இலங்கை பிரதிநிதி. மக்காவில் உள்ள ராபிதாவின் (MWL) அனுசரணையில்...

எரிபொருள் தட்டுப்பாட்டால் மின்சார வாகனங்கள் மீதான ஆர்வம்: ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மாற்றம்!

ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள்...