புதிய QR முறை கொடுப்பனவுக்கு அப்பாற் சென்ற கலாசார ரீதியிலான பிணைப்பாக மேம்பட வேண்டுமென ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புதிய டிஜிட்டல் யுகத்தை நோக்கி பரிணாமமடையும் போது இது மிகவும் விசேட மைல்கல்லாக அமையுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய QR கொடுப்பனவை பிரபல்யப்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றது. நாணயம் மற்றும் நாணயத்தாள் பயன்பாடு குறைந்த பொருளாதார செயற்பாடுகளின் அடிப்படை நோக்கத்திற்கமைய இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஐயாயிரம் ரூபாவிற்கு குறைந்த அனைத்து உள்நாட்டு QR கொடுப்பனவுகளுக்கென அறவிடப்படும் சேவைக் கட்டணம் முழுமையாக நீக்கப்படும்.
