இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் வீதி விபத்துக்களால் 670க்கும் மேற்பட்ட உயிரிழப்பு!

Date:

நாடு முழுவதும் ஆண்டுதோறும் பதிவாகும் வீதி விபத்துகளின் எண்ணிக்கையில் ஒரு சீரான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் வீதி விபத்துக்களினால் 676 நபர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மனோஜ் ரணகல குறிப்பிட்டுள்ளார்.

வீதி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனை விவரித்தார்.

வீதி விபத்துக்களினால் இவ்வாறு உயிரிழப்பு ஏற்படுவது கவலைக்குரியதாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மோசமான சாலை நிலைமைகள், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகம் மற்றும் மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் ஆகியவை வீதி விபத்துக்களை ஏற்படுத்துவதற்கான பிரதான காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

2026 ஏப்ரல் 5 ஆம் திகதி நிலவரப்படி வீதி விபத்துக்களில் 230 பாதசாரிகளும் 247 மோட்டார் சைக்கிள் சாரதிகளும் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர்.

Popular

More like this
Related

வித்தியா கொலை வழக்கின் தண்டனை கைதி தற்கொலை

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை நியமிக்கப்பட்ட...

ஹஜ் யாத்திரை குறித்து பிரதி அமைச்சர் முனீர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

இம்முறை ஹஜ் யாத்திரையில் பங்கேற்கும் இலங்கை யாத்திரிகர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும்...

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி ஆரம்பம்: பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக மழை

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி நாடு முழுவதும் கட்டம் கட்டமாக நிலைகொண்டு வருவதால் நாட்டின்...