கிரீஸில் 15 வயதுக்குட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாடுக்கு தடை!

Date:

2027 ஜனவரி 1 ஆம் திகதி முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு கிரீஸ் தடை விதிக்கும் என்று கிரேக்கக் குடியரசின் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாக்கிஸ் இன்று தெரிவித்துள்ளார்.

சிறுவர்களிடையே அதிகரித்து வரும் பதற்றம், தூக்கப் பிரச்சனைகள் மற்றும் இணையத் தளங்களுக்கு அடிமையாகும் தன்மை ஆகியவற்றை கருத்திற் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த தடையினை நாட்டிலுள்ள சுமார் 80 சதவீதம் பேர் ஆதரித்துள்ளதாக கிரீஸில் உள்ள கருத்துக் கணிப்பு ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

கிரேக்க அரசாங்கம் ஏற்கனவே பாடசாலைகளில் மாணவர்களிடத்தில் மொபைல் பாவனையை தடை செய்துள்ளதுடன், பதின்ம வயதினரின் திரை நேரத்தைக் கட்டுப்படுத்த பெற்றோர் கட்டுப்பாட்டுத் தளங்களையும் அமைத்துள்ளது.

கடந்த ஆண்டு 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை அணுகுவதைத் தடுத்த உலகின் முதல் நாடாக அவுஸ்திரேலியா மாறியது.

அதையடுத்து, சுலோவீனியா, இங்கிலாந்து, ஆஸ்திரியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளும் இதேபோன்ற தடைகளை விதிக்கும் பணியில் தற்சமயம் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உடல் நலக்குறைவால் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று...

சதொச நிறுவனத்தினால் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனத்தினால் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின்...