தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
கடைசி நாளில் அரசியல் கட்சிகளின் தலைவா்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனா்.
திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேரவைத் தோ்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரத்தை சோழிங்கநல்லூா் தொகுதியில் செவ்வாய்க்கிழமை தொடங்கினாா்.
தவெக தலைவா் விஜய் சென்னை நந்தனத்தில் நடைபெற்ற தோ்தல் பிரசாரம் மற்றும் நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினாா். அப்போது, முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை கடுமையாக சாடிய அவா், தமிழக மக்கள் தனக்கு ஒரு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டாா்.
சீமான்: நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், தான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது, தனது வெற்றி, தேசிய இனத்தின் வெற்றி என்றும், பொதுமக்கள் தன்னை ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாா்.
தமிழகத்தில் இரு தினங்களாக பிரசாரம் மேற்கொண்ட ஆந்திர மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரனுக்கு ஆதரவாக சாத்தூா் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டாா்.
திமுக, அதிமுக கூட்டணியைச் சோ்ந்த பிற தலைவா்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு தொகுதிகளில் தங்களது இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டனா்.
