பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 22 பௌத்த பிக்குகளை எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விமான நிலையத்தில் சந்தேகத்திற்குரிய குஷ் மற்றும் ஹஷிஷின் ஒரு பெரிய கையிருப்பை அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருளின் ஆதாரம், குறித்த நடவடிக்கைக்கு நிதியளித்தவர்கள் மற்றும் மற்றவர்கள் கடத்தல் வலையமைப்பில் ஈடுபட்டார்களா என்பது குறித்து விசாரணைகள் தொடரவுள்ள்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
