2.5 மில். டொலர் அரச நிதி மோசடி: ஜனாதிபதி பாராளுமன்றில் நாளை உரை

Date:

அவுஸ்திரேலிய கடன் வழங்குநருக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம் தரப்பினரால் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் நிதியமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை செவ்வாய்க்கிழமை (05) பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.

2025 செப்டெம்பர் மாதம் முதல் டிசெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் திறைசேரியால் செலுத்தப்பட்ட 10 கொடுப்பனவுகளின் மொத்த தொகையான 2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் முன்னிலையான திறைசேரியின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும பல விடயங்களை வெளிப்படுத்தினார்.

இந்த மோசடி தொடர்பில் நிறுவன மட்டத்தில் உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஊடாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திறைசேரியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றம் நாளை கூடவுள்ள நிலையில், இந்த நிதி மோசடி விவகாரம் தொடர்பில் நிதி அமைச்சரான,ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விசேட உரையாற்றவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கை வரவுள்ளார் வியட்நாம் ஜனாதிபதி!

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி தோ லாம் அவர்கள் இலங்கைக்கு விஜயம்...

வளைகுடா நாடுகளிடம் இழப்பீடு கோரும் ஈரான்: அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றச்சாட்டு!

-லத்தீப் பாரூக் சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும்...

சட்டவிரோத வெளிநாட்டவர்களுக்கு தங்குமிடம் வழங்குபவர்களுக்கு சட்ட நடவடிக்கை

வீசா காலம் நிறைவடைந்து நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு தங்குமிடம் வழங்குபவர்களுக்கு எதிராக...

இலங்கை – மாலைதீவு உறவில் புதிய மைல்கல்: 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் மாலைதீவு ஜனாதிபதி மொஹமட்...