கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அவிசாவளையில் பதிவு

Date:

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று (15) முற்பகல் 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அவிசாவளை பகுதியில் பதிவாகியுள்ளது.

நீர்ப்பாசனப் பணிப்பாளர் (நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மை) பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார இது குறித்து தெரிவிக்கையில், அவிசாவளையில் 180 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதற்கு மேலதிகமாக ஏனைய பகுதிகளில் பதிவான மழைவீழ்ச்சி விபரங்கள் பின்வருமாறு, ஹன்வெல்ல: 158 மி.மீ, தெரணியகல: 122 மி.மீ

இந்தக் கனமழை காரணமாக நேற்று (14) இரவு முதல் களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து காணப்பட்ட போதிலும், அது இதுவரை அனர்த்த எச்சரிக்கை மட்டத்தை எட்டவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அத்தனகலு ஓயாவின் தூனமலே நீர்மானி நிலையப் பகுதியிலும் அதனைச் சூழவுள்ள இடங்களிலும் 176 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

மோசமான வானிலை; உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களைப் பாதித்த பேரிடர் சூழ்நிலையின் விளைவாக,...

சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை எளிதாக்கும் PayPal இன்று முதல் இலங்கையிலும் அறிமுகம்

டிஜிட்டல் பொருளாதாரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், PayPal பணப்பரிமாற்ற முறை இன்று (15)...

நிதி மோசடி குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரி கைது!

அதிகாரப்பூர்வ மென்பொருள் நிறுவலுடன் தொடர்புடைய நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ், குடிவரவு...

மோசமான வானிலையால் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் பாதிப்பு!

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள 1,113...