இலங்கை – பெலாரஸ் இடையே சுகாதாரத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Date:

இலங்கை மற்றும் பெலாரஸ் குடியரசுக்கு இடையே சுகாதார சேவை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தமானது இரு நாடுகளுக்கும் இடையிலான மருத்துவக் கல்வி, சுகாதார சேவைகள் மற்றும் ஆராய்ச்சி ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாகும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பெலாரஸிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் விஜித ஹேரத், அந்நாட்டு சுகாதார அமைச்சர் அலெக்சாண்டர் கஜாயேவை (Alexander Khajayev) சந்தித்துள்ளதுடன், சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.

இதற்கிடையில், மின்ஸ்க் நகரில் அமைந்துள்ள பெலாரஸ் அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு அமைச்சர் விஜித ஹேரத் கண்காணிப்பு விஜயம் ஒன்றையும் மேற்கொண்டார். அங்கு அவர் அந்தப் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள் மற்றும் விட்டெப்ஸ்க், க்ரோட்னோ மற்றும் கோமல் ஆகிய மருத்துவப் பல்கலைக்கழகங்களின் பீடாதிபதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

தற்போது 3,000க்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் அங்கு மருத்துவக் கல்வி கற்று வருவதாகவும், இது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் வலுவான கல்விப் பங்களிப்பை பிரதிபலிக்கிறது என்றும் வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டை விஞ்ஞான...

களு கங்கையை அண்மித்த பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை

களு கங்கை வடிநிலப்பகுதியில் உள்ள நீர்மானி நிலையங்களின் நீர்மட்ட ஆய்வுகளின்படி, அடுத்த...

மோசமான வானிலை; உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களைப் பாதித்த பேரிடர் சூழ்நிலையின் விளைவாக,...

சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை எளிதாக்கும் PayPal இன்று முதல் இலங்கையிலும் அறிமுகம்

டிஜிட்டல் பொருளாதாரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், PayPal பணப்பரிமாற்ற முறை இன்று (15)...