எபோலா வைரஸ் பரவல் குறித்து இலங்கையில் அவசரத் திட்டங்களை அறிவித்தது சுகாதார அமைச்சு!

Date:

எபோலா வைரஸ் பரவல் நிலைமையை உலக சுகாதார நிறுவனம் (WHO) சர்வதேச பொதுச் சுகாதார அவசரநிலையாகப் பிரகடனப்படுத்தியுள்ளதை அடுத்து, அதற்கு இணங்க இலங்கையிலும் 5 முக்கிய அவசர நடவடிக்கைகளை எடுப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இன்று (2026.05.20) விடுத்துள்ள விசேட அறிக்கை ஒன்றில் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையின்படி, காங்கோ குடியரசு மற்றும் உகண்டா ஆகிய நாடுகளில் தற்போது எபோலா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளதுடன், இதனை உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய பொதுச் சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளதாக வைத்தியர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தொற்று இலங்கைக்குள் பரவாமல் தடுப்பதற்காக, உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளுக்கு அமைய பின்வரும் 5 அம்சக் கூட்டு நடவடிக்கைகளை எடுக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது:

 கட்டுநாயக்க உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களின் ஊடாக நாட்டிற்குள் வருவோர் மீதான கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளை பலப்படுத்துதல்.

எபோலா தொற்றுக்குள்ளான சந்தேகத்தின் பேரில் நோயாளி எவரேனும் அடையாளம் காணப்பட்டால், அவருக்கு சிகிச்சையளிப்பதற்காக தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (IDH) முழுமையாகத் தயார்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றுநோயைக் கண்டறிவதற்கான ஆய்வகப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்குள்ளான ஒட்டுமொத்த தொற்றுநோய் கண்காணிப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், உலகளாவிய எபோலா பரவல் நிலவரங்களை உன்னிப்பாக அவதானித்தல்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு, உலக சுகாதார நிறுவனத்துடன் (WHO) இணைந்து தொடர்ச்சியான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.

இருப்பினும், உலக சுகாதார நிறுவனத்தின் அளவுகோல்களின்படி, எபோலா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்பில் இலங்கை மிகவும் ‘குறைந்த ஆபத்துள்ள’ (Low Risk) நாடாகவே பட்டியலிடப்பட்டுள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, இந்த நிலைமை குறித்து பொதுமக்கள் எவரும் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பதற்கும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சுகாதார அமைச்சு ஏற்கனவே எடுத்துள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!

தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ்...

தேர்தலை ஒத்திவைப்பதால் ஏற்படும் பாதிப்புகள்: புத்தளத்தில் ‘பெஃப்ரல்’ அமைப்பின் விழிப்புணர்வு கருத்தரங்கு!

தேர்தல் ஒத்திவைக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்று அண்மையில்...

இலங்கையின் உப்பு ஏற்றுமதி வருமானத்தை இரட்டிப்பாக்க புதிய திட்டம்!

இலங்கையின் உப்பு ஏற்றுமதி வருமானத்தை வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் 400...

நள்ளிரவு முதல் இறக்குமதி செய்யப்படும் பால் மா விலைகள் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. விலைத்...