ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவரும், தற்போதைய மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினரும், இந்திய பொருளாதார மையத்தின் (ICIF) பொதுச் செயலாளருமான H. அப்துர் ரகீப் அவர்கள், தமிழ்நாடு சட்டமன்றச் சபாநாயகர் திரு. ஜே.சி.டி. பிரபாகரன் அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார்.
மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, இந்திய பொருளாதார மையத்தின் (ICIF) முக்கிய செயல்பாடுகள் குறித்தும், இஸ்லாம் வாழ்வியல் தொடர்பான பல்வேறு அரிய கருத்துக்கள் குறித்தும் இரு தலைவர்களும் விரிவாகக் கலந்துரையாடினர்.
நீண்ட நேரம் மிகவும் சுமுகமாகவும் பயனுள்ள வகையிலும் நடைபெற்ற இந்த ஆலோசனையின் நிறைவாக, சபாநாயகர் அவர்களுக்கு ‘சமரசம்’ சமூக வார இதழ் மற்றும் இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட சிறப்பு நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

