இலங்கையில் பௌத்த தர்மம் உருவாகிய தினத்தை பொசன் பௌர்ணமி தினமாக பௌத்தர்கள் நினைவுகூறுகின்றனர்.
மஹிந்த தேரர் தலைமையிலான தூதுக் குழு இலங்கைக்கு வருகை தந்து பௌத்த மதத்தை போதிக்க ஆரம்பித்தமை இன்றுபோன்றதொரு நாளிலாகும். அன்று முதல் இலங்கையில் பௌத்த மதம் வியாபிக்க ஆரம்பித்தது.
அனுராதபுரம் மிஹிந்தலை பகுதிக்கு வருகை தந்த மஹிந்த தேரர் உள்ளிட்ட குழுவினர் அப்போதைய அனுராதபுரத்தை ஆட்சி செய்த மன்னன் தேவநம்பியதிஸ்ஸ உள்ளிட்ட இலங்கையர்களுக்கு பௌத்த மதத்தை போதித்தனர்.
பௌத்த மதம் இலங்கையில் உருவாக ஆரம்பித்தது முதல் நாட்டில் சமய, சமூக கலாசார மறுமலர்ச்சி ஏற்ப்பட்டது. பௌத்த தர்மத்துடன் தொடர்புடைய கலாசார அடிப்படையிலான நீர்ப்பாசனக் கட்டமைப்பும் விவசாயத்தை மையமாகக் கொண்ட சமூக கட்டமைப்பும் வலுப்பெற்றது. இதேவேளை இந்த ஆண்டு பொசன் பௌர்ணமி தின நிகழ்வுகள் மிஹிந்தலை புனித பூமியை மையமாகக் கொண்டு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
