நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை- சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் விளக்கம்

Date:

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (திங்கட்கிழமை) காலை காலை உணவு விநியோகிக்கப்பட்ட போது, இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதலை அடுத்து, சிறைச்சாலை அதிகாரிகள் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.

எனினும், இன்று காலை உணவு விநியோகத்திற்காக அதிகாரிகள் சிறைச்சாலைக்குள் நுழைந்த போது, இரு குழுக்களையும் சேர்ந்த கைதிகள் மீண்டும் மோதிக்கொண்டனர்.

அதிகாரிகள் தலையிட்டு அமைதியை நிலைநாட்ட முயன்ற போதிலும், கைதிகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, கைதிகள் அதிகாரிகளை சிறைச்சாலையின் பிரதான வாயில் வரை துரத்திச் சென்று தொடர்ந்து தாக்கியதுடன், நுழைவாயிலை உடைக்கவும் முற்பட்டுள்ளனர்.

வாயிலில் கடமையில் இருந்த அதிகாரிகள், கைதிகள் நுழைவாயிலை சேதப்படுத்துவதைத் தடுக்கவும் அவர்களை அந்தப் பகுதியில் இருந்து அகற்றவும் முயன்ற போது, பெருமளவிலான கைதிகளால் மீண்டும் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மேலதிக சிறைச்சாலை அதிகாரிகள் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர குறைந்தபட்ச பலத்தைப் பயன்படுத்தியதாக திஸாநாயக்க தெரிவித்தார். இம்மோதலில் பல சிறைச்சாலை அதிகாரிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வன்முறைச் சம்பவத்தில் இதுவரை குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் குறித்த முழுமையான விபரங்களை அதிகாரிகள் தொடர்ந்து மதிப்பீடு செய்து வருகின்றனர்.

Popular

More like this
Related

நேபாள வெளியுறவு அமைச்சருடன் விஜித்த ஹேரத் தொலைபேசி உரையாடல்: உதவிக்கு தயார்!

நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து நிலவும் சூழல் குறித்து, அந்நாட்டு...

நேபாள மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் இலங்கை – ஜனாதிபதி அனுதாபம்!

நேபாளத்தின் கடும் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார...

கடற்பிரதேசங்களில் பலத்த காற்று

புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பகுதிகளில்...

விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பும் சர்வதேச முயற்சியில் கிண்ணியா மாணவி நூரி இணைவு: 27ஆம் திகதி இந்தியா பயணம்!

உலகளாவிய ரீதியில் முதல் முறையாக பெண் மாணவிகள் இணைந்து விண்கலமொன்றை விண்வெளிக்கு...