நாட்டின் முதலாவது சர்வதேச மும்மொழி இலக்கிய விழா கொழும்பில் ஆரம்பம்

Date:

இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் புகழ்பெற்ற எழுத்தாளருமான சஷி தரூர் கொழும்பில் ஆரம்பமாகியுள்ள இலக்கிய விழாவின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டார்.

நாட்டின் முதலாவது சர்வதேச மும்மொழி இலக்கிய விழாவாக ஏற்பாட்டாளர்கள் இதனை வரையறுக்கின்றனர்.

சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ பிரதம விருந்தினரான பங்கேற்றார்.

நேற்றைய தினம் ஆரம்பமான இந்த இலக்கிய திருவிழா எதிர்வரும் 29ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளுக்கும் சம முன்னுரிமை வழங்கும் வகையில் சர்வதேச மற்றும் உள்நாட்டு எழுத்தாளர்கள், கவிஞர்கள், கல்வியலாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் வாசகர்கள் ஆகியோரை ஒரே இடத்தில் ஒன்றிணைக்கும் நோக்கில் இந்த இலக்கிய விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலக்கிய ரீதியாக இலங்கையின் அடையாளத்தை சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல இந்த நிகழ்வு வழிவகுக்குமென அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதன்போது தெரிவித்தார்.

இலக்கிய விழா இடம்பெறும் காலப்பகுதியில் இலக்கிய கலந்துரையாடல்கள், நூல் வெளியீடு, படைப்பாற்றல்மிக்க செயலமர்வுகள், திரைப்படங்களின் திரையிடல் , கலாசார நிகழ்வுகள், இசை நிகழ்வுகள் உள்ளிட்டவை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிராக...

பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும்...

2027ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயண முகவர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியீடு!

இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவுக்கு 2027ஆம் ஆண்டு (ஹிஜ்ரி 1448) ஹஜ் புனித...

அமைச்சர் வசந்த சமரசிங்க – குவைத் தூதுவருக்கு இடையில் சந்திப்பு!

இலங்கைக்கும் குவைத்திற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவதற்கான...