முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கை முன்னேற்றம்

Date:

முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை தொடர்பில் வேகமாக முன்னேறி வரும் வளர்ந்து வரும் சந்தை நாடுகளில் ஒன்றாக இலங்கை முன்னேறியுள்ளது.

சர்வதேச நிதி நிறுவனம் (Institute of International Finance – IIF) வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டில், அதிக முன்னேற்றம் கண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 4 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

கடன் மறுசீரமைப்புக்குப் பின்னர் சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இது முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

IIF வெளியிட்டுள்ள “முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை அறிக்கை 2026: வெளிப்படைத்தன்மையின் பலன்”  அறிக்கையின் படி, இலங்கையின் முதலீட்டாளர் உறவுகள் தொடர்பான மொத்த மதிப்பெண் 2025 ஆம் ஆண்டில் 37.33 ஆக இருந்த நிலையில், 2026ஆம் ஆண்டில் 43.67 ஆக அதிகரித்துள்ளது.

இதன் மூலம், சர்வதேச சிறந்த நடைமுறைகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட்ட 57 வளர்ந்து வரும் சந்தை மற்றும் அபிவிருத்தி அடையும் பொருளாதார நாடுகளில், இலங்கை முதல் 25 சதவீதத்துக்குள் இடம்பெற்றுள்ளது.

முதலீட்டாளர் உறவுகள் மதிப்பீட்டில் 6.3 புள்ளிகள் முன்னேற்றத்தை பதிவு செய்த இலங்கை, வியட்நாம், பெலிஸ் மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக அதிக முன்னேற்றம் கண்ட நாடாக தரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கடன் வெளிப்படைத்தன்மை நடைமுறைகளை மேம்படுத்திய நாடுகளிலும் இலங்கை முன்னணி இடத்தைப் பெற்றுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் தகவலின்படி, கடன் வெளிப்படைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாக (ESG) தரவுகள் மற்றும் கொள்கை தகவல்களை வெளியிடுவதில் ஏற்பட்ட முன்னேற்றமே இலங்கையின் தரநிலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

கடன் வெளிப்படைத்தன்மை மேம்பாட்டில், 2025 ஆம் ஆண்டில் 19 ஆவது இடத்தில் இருந்த இலங்கை, 2026ஆம் ஆண்டில் 5 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகம் (PDMO) உள்ளிட்ட அரச நிறுவனங்களின் தொடர்ச்சியான நடவடிக்கைகள், முதலீட்டாளர்களுடனான தொடர்புகளை வலுப்படுத்துதல் மற்றும் கடன் தகவல்களை வெளிப்படையாக வெளியிடுதல் ஆகியவை இந்த முன்னேற்றத்துக்கு காரணமாக அமைந்ததாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த முன்னேற்றங்கள் மூலம் இலங்கையின் முதலீட்டாளர் நம்பிக்கை அதிகரிக்கும் என்றும், அரச பத்திர முதலீட்டாளர்களின் எண்ணிக்கை விரிவடையும் என்றும், சர்வதேச மூலதன சந்தைகளில் நாட்டின் நம்பகத்தன்மை உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ராஷித் அல்-கன்னூசியின் உடல்நிலை குறித்து சர்வதேச முஸ்லிம் உலமாக்கள் ஒன்றியம் கவலை: துனிசிய அரசிற்கு கோரிக்கை!

துனிசியாவின் மூத்த அரசியல் தலைவரும், பிரபல இஸ்லாமிய அறிஞருமான ஷேக் ராஷித்...

சுரேஷ் சலேயின் ரிட் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச்...

இன்று முதல் தென்மேற்குப் பகுதியில் மழை அதிகரிக்கும்!

இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சி...

தேசிய பாதுகாப்பை மீள் உறுதி செய்தலில் நீதித்துறையின் வகிபாகம்.

நேற்றைய தொடர்ச்சி... பகுதி-02 குடும்பக் கட்டமைப்புகள் பல தலைமுறைகளைக் கொண்டதாகவும் சமூக அடிப்படையிலானதாகவும் இருந்தன. மத...