அரசுக்கு சொந்தமான மாளிகைகள், வீடுகள் மற்றும் ஜனாதிபதி மாளிகைகளை பொருளாதார ரீதியாக பயனுள்ள வகையில் பயன்படுத்தும் வகையில் பொருத்தமான செயன்முறைகளை அறிமுகப்படுத்துவதற்கென நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை கவனத்திற்கொண்டு பெந்தொட்டை, கதிர்காமம், மஹியங்கனை, எம்பிலிப்பிட்டிய மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளிலுள்ள ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா துறையின் முதலீட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கென யோசனைகளை பெற்று பொருத்தமான முதலீட்டாளர்களுக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கும் வகையில் ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
