இலங்கையில் 83,000 ஐக் கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

Date:

நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், டெங்கு நோய் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் அதிகளவான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 17,779 ஆகும்.

இரண்டாவது அதிகளவான நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 16,665 ஆகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அதிகளவான நோயாளர்கள் பதிவான மாகாணமாக மேல் மாகாணம் தொடர்ந்து நீடிப்பதுடன், இந்த ஆண்டில் இதுவரை மேல் மாகாணத்தில் 44,359 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இரண்டாவதாக தென் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அந்தப் பிராந்தியத்தில் 12,586 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நாடு முழுவதும் டெங்கு நோய் பரவி வரும் இந்த வேளையில், 175 அதி-அபாய வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரி சதக்கத்துல்லா மறைவு!

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) மேனாள் அதிகாரியும், பொருளாதார வல்லுநருமான முனைவர்...

ஆன்மீக ஒளி பரப்பும் எசல பௌர்ணமி தினம் இன்று!

இலங்கை உள்ளிட்ட உலகெங்கும் உள்ள பௌத்த மக்களால் மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கப்படும்...

இன்று முதல் மழையுடனான வானிலை அதிகரிக்ககூடும்!

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு மழைவீழ்ச்சி...

ஜனாதிபதி மாளிகை குத்தகைக்கு: அமைச்சரவை அனுமதி

அரசுக்கு சொந்தமான மாளிகைகள், வீடுகள் மற்றும் ஜனாதிபதி மாளிகைகளை பொருளாதார ரீதியாக...