இந்த ஆண்டில் இதுவரை 1.3 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை!

Date:

இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.3 மில்லியனைக் கடந்துள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தகவல்களின்படி, ஜனவரி 1 முதல் ஜூலை 26 வரையிலான காலப்பகுதியில் மொத்தம் 1,313,974 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

ஜூலை மாதத்தின் முதல் 26 நாட்களில் மொத்தம் 167,401 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்தனர்.

ஜூலை மாதத்தில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடாக இந்தியா திகழ்ந்தது.

இக்காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து 38,785 பேர் வருகை தந்தனர். மேலும், இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த இந்திய சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 310,293 ஆக பதிவாகியுள்ளது.

இதுவே எந்தவொரு நாட்டிலிருந்தும் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கையில் மிக அதிகமாகும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரி சதக்கத்துல்லா மறைவு!

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) மேனாள் அதிகாரியும், பொருளாதார வல்லுநருமான முனைவர்...

இலங்கையில் 83,000 ஐக் கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும்...

ஆன்மீக ஒளி பரப்பும் எசல பௌர்ணமி தினம் இன்று!

இலங்கை உள்ளிட்ட உலகெங்கும் உள்ள பௌத்த மக்களால் மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கப்படும்...

இன்று முதல் மழையுடனான வானிலை அதிகரிக்ககூடும்!

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு மழைவீழ்ச்சி...