புனித மக்கா மண்ணில் மிளிரும் இலங்கையின் குரல்: சர்வதேச குர்ஆன் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஸயீத் முஹம்மத் இப்பத்!

Date:

சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரில் அமைந்துள்ள புனித மஸ்ஜிதுல் ஹராம் வளாகத்தில், சவூதி இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சின் ஒழுங்கமைப்பில் 2026ஆம் ஆண்டிற்கான 46ஆவது சர்வதேச மன்னர் அப்துல் அஸீஸ் திருக்குர்ஆன் மனனம், பாராயணம் மற்றும் தஃப்சீர் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகின்றது.

இரு புனித தலங்களின் காவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் அவர்களின் அணுசரனையில் நடைபெற்று வரும் இம்மாபெரும் உலகளாவிய போட்டியில், உலகளவில் 133 நாடுகளைச் சேர்ந்த 334 சிறந்த போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

இம்மாபெரும் சர்வதேச மேடையில், இலங்கையின் பிரதிநிதியாக ஸயீத் முஹம்மத் இப்பத் கலந்துகொண்டு தனது மிகச்சிறந்த குர்ஆன் பாராயணத் திறமையை வெளிப்படுத்தித் தாய்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகின்றார்.

இம்முறை வரலாற்றிலேயே முதன்முறையாகப் பெண் போட்டியாளர்களுக்கான தனிப்பிரிவும், 10 மில்லியன் சவூதி ரியால்களுக்கு மேலான மிகப்பெரிய பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற குர்ஆன் கலை வல்லுநர்களைக் கொண்ட நடுவர் குழுவின் முன்னிலையில் அதிநவீன மின்னணு முறைமையைப் பயன்படுத்தித் துல்லியமாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

புனித கஃபாவின் வழிகாட்டலில் ஒலிக்கும் இலங்கையின் குரல், சர்வதேச அளவில் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருவதோடு, நாட்டின் பெருமையை உலகரங்கில் உயர்த்திப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நிலவும் சீரற்ற வானிலை: க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு அவசர உதவி இலக்கங்கள் அறிவிப்பு!

தற்போது நிலவும் சீரற்ற வானிலையால் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு...

இஷாரா செவ்வந்திக்கு ஆகஸ்ட் 21 வரை விளக்கமறியல் நீடிப்பு

திட்டமிட்ட குற்றக்குழுவின் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைது...

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு:’காஞ்சிபானி இம்ரானின்’ நெருங்கிய உறவினர் சுட்டுக்கொலை

கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், பாதாள உலகக்...