இராணுவ வைத்தியசாலையில் கொவிட் தடுப்பூசியை தமது கட்சி M.Pகள் பெற்றுக்கொள்ள போவதில்லை | தமிழ் தேசிய மக்கள் முன்னணி

Date:

இராணுவ வைத்தியசாலையில் கொவிட் தடுப்பூசியை தமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ள போவதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவிக்கின்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் S.கஜேந்திரன் இது தொடர்பில் தெரிவிக்கையில்

இன அழிப்பை நடத்திய இராணுவத்தின் செயற்பாட்டை தாம் ஏற்றுக்கொள்ள போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் எண்ணம் தனக்கு உள்ள போதிலும், இராணுவத்திடமிருந்து அதனை பெற்றுக்கொள்வதற்கான எண்ணம் கிடையாது எனவும் S.கஜேந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை, இராணுவ வைத்தியசாலைக்கு சென்று கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஶ்ரீதரன் தெரிவிக்கின்றார்.

இராணுவ வைத்தியசாலைக்கு சென்று, தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பில் தனக்கு நம்பிக்கை கிடையாது எனவும் அவர் கூறினார்.

அரசாங்க வைத்தியசாலைகள் காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில், ஏன் இராணுவ வைத்தியசாலைகளில் இந்த தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்புகின்றார்.

கிளிநொச்சியில் தடுப்பூசி வழங்கப்படும் சந்தர்ப்பத்தில், மக்களோடு மக்களாக தானும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தயார் என எஸ்.ஶ்ரீதரன் தெரிவித்தார்.

வவுனியா கோகுலன்

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...