புத்தளம் புகையிரத பயணிகளுக்கான விசேட அறிவிப்பு

Date:

கட்டுநாயக்க மற்றும் புத்தளம் புகையிரத நிலையங்களுக்கு இடையிலான புகையிரத பயணங்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையில் தற்காலகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளம் புகையிரத பாதையின் குரண மற்றும் நீர்கொழும்பு புகையிரத நிலையங்களுக்கு இடையில் இரட்டை வழி பாதை அபிவிருத்து காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், குரண மற்றும் நீர்கொழும்பு இடையேயான புகையிரத பாதை 26 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் 28 ஆம் திகதி இரவு 8.30 மணி வரை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த காலப்பகுதியில் கட்டுநாயக்க மற்றும் புத்தளம் புகையிரத நிலையங்களுக்கு இடையே புகையிரத சேவை முன்னெடுக்கபடாத காரணத்தினால், கொழும்பு கோட்டை மற்றும் கட்டுநாயக்க புகையிரத நிலையங்களுக்கு இடையில் மட்டுமே புகையிரத சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...