நாளை முதல் அரச ஊழியர்கள் சகலரும் அலுவலகம் சென்று பணியாற்ற வேண்டும் என அறிவிப்பு

Date:

கொரோனா தொற்று காரணமாக கடந்த சுமார் ஒரு வருட காலமாக அரசாங்க ஊழியர்களுக்கு தத்தமது வீடுகளில் இருந்து பணி புரிவதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றோடு முடிவுக்கு வருவதாகவும் நாளை முதல் சகல அரசாங்க ஊழியர்களும் தத்தமது
அலுவலகங்களுக்கு பணிக்காக திரும்ப வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புதிய சுற்றுநிருபம் ஒன்று
வெளியிடப்பட்டுள்ளது .

பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் இந்த சுற்று நிருபத்தை அனுப்பி வைத்துள்ளார். அதன் பிரகாரம் சகல அரசாங்க ஊழியர்களும் நாளை முதல் தமது கடமை இடங்களுக்கு வேலைக்காக வருகை தருவது அவசியம் ஆக்கப்பட்டுள்ளது. நாளை முதல் வேலைக்கு வராமல் இருப்பவர்கள் உரிய தினங்களுக்கு லீவு எடுக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்று நிருபத்தின் படி அலுவலகத்துக்கு வேலைக்கு வரும் ஊழியர்களுக்கு தேவையான சுகாதார பாதுகாப்பினை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது அந்தந்த அலுவலக பிரதானிகளின் கடமையாக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த அரசு அலுவலகங்களுக்கு தமது தேவைகளுக்காக வரும் பொது மக்களுக்கும் அதே போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அலுவலக பிரதானிகளின் கடமையாக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புதிய சுகாதார நெறிமுறைகளும் அரசாங்க அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

Popular

More like this
Related

பெப்ரவரி மாதத்திற்கான ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில்!

பெப்ரவரி மாதத்திற்கான ‘அஸ்வெசும’ முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழான முதியோர்...

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்; ‘தார்மீக கோழைத்தனம்’ என காங்கிரஸ் விமர்சனம்

இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கையை இந்தியாவின் எதிர்க்கட்சிகள்...

சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு: பரீட்சைக்குப் பின் மோதல்களைத் தவிர்க்க நடவடிக்கை

கடந்த 17ஆம் திகதி ஆரம்பித்த O/L பரீட்சை இன்று (26) நிறைவடையவுள்ளது. O/L...

பிரதமர் மோடி, இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் உயரிய கௌரவமான ‘Speaker of the Knesset Medal’ஐ பெற்றார்.

பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். நேற்று அவர் அந்நாட்டு...