இலங்கையில் தன்னை கண்காணிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றனவா என இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பிலுள்ள தனது இல்லத்திற்கு விஜயம் செய்த இருவர் குறித்து ஊடகங்களில் தகவல்கள் வெளியானதை தொடர்ந்தே கனடா உயர்ஸ்தானிகர் இது குறித்து டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
நான் கண்காணிக்கப்படுகின்றறேனா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது தனிப்பட்ட சந்திப்புகள் எவ்வாறு ஊடகங்களிற்கு தெரியவந்தன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார் என சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அந்த சந்திப்பின்போது ஊடகவியலாளர்கள் இல்லாததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
கனடா உயர்ஸ்தானிகர் இலங்கையில் உள்ள இரு வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்களை சந்தித்தமை குறித்து நாளிதழ்கள் செய்தி வெளியிட்டிருந்தன.