இலங்கையில் என்னை கண்காணிக்கின்றார்களா ? கனடா உயர்ஸ்தானிகர் கேள்வி

Date:

இலங்கையில் தன்னை கண்காணிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றனவா என இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பிலுள்ள தனது இல்லத்திற்கு விஜயம் செய்த இருவர் குறித்து ஊடகங்களில் தகவல்கள் வெளியானதை தொடர்ந்தே கனடா உயர்ஸ்தானிகர் இது குறித்து டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நான் கண்காணிக்கப்படுகின்றறேனா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது தனிப்பட்ட சந்திப்புகள் எவ்வாறு ஊடகங்களிற்கு தெரியவந்தன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார் என சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அந்த சந்திப்பின்போது ஊடகவியலாளர்கள் இல்லாததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
கனடா உயர்ஸ்தானிகர் இலங்கையில் உள்ள இரு வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்களை சந்தித்தமை குறித்து நாளிதழ்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

Popular

More like this
Related

2026 வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றுக்கு

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு...

நாட்டின் 5 மாகாணங்கள் உள்ளிட்ட பகுதிகளில் 75 மி.மீ. மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மாகாணங்களிலும்...

வித்தியா கொலை; மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

3ஆம் தவணைக்கான முதல் கட்டம் நாளையுடன் நிறைவு.

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல்...