கொழும்பு − கிரான்பாஸ் பகுதியில் பாரிய தீ | 50திற்கும் அதிக வீடுகள் சேதம்

Date:

கொழும்பு − கிரான்பாஸ் − கஜீமா தோட்டத்தில் பரவிய பாரிய தீயினால், பல வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. இந்த தீ இன்று அதிகாலை 2.40 அளவில் பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் நிர்மானிக்கப்பட்டிருந்த சுமார் 50திற்கும் அதிகமான தற்காலிக வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.

பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவு இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் கூறுகின்றனர்.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், கிரான்பாஸ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...