இந்தோனேசியா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பாரிய தீ விபத்து

Date:

இந்தோனேசியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் காயமுற்றனர். ஆலைக்கு அருகே வசிக்கும் சுமார் 950 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

மேற்கு ஜாவாவில் உள்ள Balongan எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், நள்ளிரவுக்குப் பிறகு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அந்த ஆலையில் ஒரு நாளைக்கு 125,000 பீப்பாய் எண்ணெய் சுத்திகரிக்கப்படுவதாகத் தேசிய எரிசக்தி நிறுவனமான Pertamina தெரிவித்தது.

தீ விபத்து ஏற்படும் போது கடும் மழை பெய்து கொண்டிருந்ததாகவும், மின்னல் தாக்கம் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறு தீ விபத்துக்குள்ளாகது என்பது இதுவரையில் தெரியவில்லை எனவும் எண்ணெய் வழிந்து தீ பரவுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக Pertamina நிறுவனம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் இலவச விசா !

குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு வருகை தரும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா...

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பு: நாடு முழுவதும் 18 புதிய கோல்போஸ்கோபி இயந்திரங்கள் வழங்கிவைப்பு!

இலங்கையில் ஐந்தாவது பொதுவான புற்றுநோயான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிவதற்கும், அது...

விமல் வீரவன்ச கைது

இராணுவ வீரர் நினைவு தின நிகழ்விற்கான ஒத்திகை செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்த...