தரமற்ற தேங்காய் எண்ணையை இந்த வாரத்திற்குள் மீள் ஏற்றுமதி செய்யுமாறு உத்தரவு

Date:

தரமற்ற தேங்காய் எண்ணை என மாதிரி பரிசோதனையில் ஒப்புவிக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்படாத எண்ணையை இந்த வாரத்திற்குள் மீள் ஏற்றுமதி செய்யுமாறு சுங்க பணிப்பாளர் சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளார்.

3 நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற தேங்காய் எண்ணையில் ´அஃப்லோடாக்சின்´ என்ற புற்றுநோய்க் காரணிகள் அடங்கியுள்ளமை இரண்டாவது முறையாகவும் நடத்தப்பட்ட மாதிரி பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.

அதன்படி தரமற்ற எண்ணையை இறக்குமதி செய்த நிறுவனங்களுக்கு அதனை மீள் ஏற்றுமதி செய்யுமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக சுங்க பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.வி. ஹரிப்பிரிய தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்டுள்ள 13 கொள்கலன்களில் உள்ள தேங்காய் எண்ணெயில் ´அஃப்லோடாக்சின்´ என்ற புற்றுநோய்க் காரணிகள் அடங்கியுள்ளதாக தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தகவவல் வெளியிட்டது.

இதனை அடுத்து இது குறித்து பல தரப்பினர் கருத்துக்களை வெளியிட்ட நிலையில், இறக்குமதி செய்யப்பட்ட குறித்த தேங்காய் எண்ணெய் தொகை தரமற்ற வகையில் இறக்குமதி செய்யப்பட்டதை அடையாளம் கண்டுக்கொண்டதாக தர நிர்ணய சபை தெரிவித்தது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற தேங்காய் எண்ணை தொடர்பில் தற்போதும் பல தரப்பினரால் விசாரணை நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...