யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கொழும்பு உட்பட 13 மாவட்டங்களுக்கு கடுமையான எச்சரிக்கை

Date:

முல்லைத்தீவு, வவுனியா, புத்தளம், குருநாகல், அனுராதபுரம், பொலன்னருவை மற்றும் மொனராகலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் வெப்பமான காலநிலை மிக தீவிரமாக உள்ளது.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த திணைக்களம் வெளியிட்ட வெப்பக் குறியீட்டின்படி,
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, மாத்தளை, அம்பாறை, பதுளை, கம்பஹா, கொழும்பு, களுத்தறை, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்கள் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படும்.
இதற்கிடையில், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அனுராதபுரம், பொலன்னருவை, புத்தளம், குருநாகல், மற்றும் மொனராகலை மாவட்டங்களும் வெப்பமான வானிலை காரணமாக பாதிக்கப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பகுதிகளில் வெயிலில் தொடர்ந்து செயற்படுவதால் மக்கள் பாதிக்கப்படலாம்.
வெளியிடத்தில் வேலை செய்வோர் முடிந்தவரை அடிக்கடி நீரேற்றத்துடன் இருக்கவும், நிழலில் இடைவெளி எடுக்கவும் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது.
வீட்டில் இருக்கும் முதியவர்கள் மற்றும் நோயுற்றவர்களின் நிலைமைகளை சரிபார்க்கவும், குழந்தைகளை கவனிக்குமாறும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...