வனப்பகுதியை பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது!

Date:

ஹம்பாந்தோட்டை காட்டு யானை மேலாண்மை பாதுகாப்பு வனப்பகுதியை பிரகடனப்படுத்தும் வகையில் முன்மொழியப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியுறவு அமைச்சர் விமலவீர திஸாநாயக்காவின் கைச்சாத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

23,746 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பகுதி காட்டு யானை மேலாண்மை வனப்பகுதியாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் , குறித்த நிலப்பகுதியில் விமான நிலையமாக பெயரிடப்பட்டிருந்த 860 ஹெக்டேர் நிலப்பகுதி நீக்கப்பட்டுள்ளது.

காட்டு யானை மேலாண்மை பாதுகாப்பு வனப்பகுதி ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு உரிய பிரதேசங்களான, ஹம்பாந்தோட்டை, சூரியவெவ, லுனுகம்வெஹெர, மற்றும் தனமல்வில ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் குறித்த காட்டு யானை மேலாண்மை பாதுகாப்பு வனப்பகுதி அமைந்துள்ளதாக குறித்த வர்த்தமானி தெரிவிக்கின்றது.

இக் காட்டு யானை வனப்பகுதியை வர்த்தமானியில் பிரகடனப்படுத்துமாறு சூரியவெவ பகுதியின் விவசாயிகள் 86 நாட்கள் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...

இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை : வெளிவிவகார அமைச்சு தகவல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து இலங்கை இராஜதந்திர தூதரகங்களுடனும் நெருங்கிய...

சவூதி, பஹ்ரைன், கத்தார், UAE மீதும் ஈரான் தாக்குதல்.. அமெரிக்காவால் வெடிக்கும் 3ம் உலகப்போர்?

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஆக்ரோஷமாக தாக்கி வருகின்றன. இதையடுத்து...

மத்தியக் கிழக்கில் போர் பதற்றம்: ஸ்ரீலங்கன் விமான சேவையில் தாமதம்

இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள்...