மீண்டும் பாடசாலைகள் மூடப்படுமா? வெளியானது கல்வி அமைச்சின் தீர்மானம்.

Date:

நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை சில சுகாதார கட்டுப்பாடு விதிகளுக்கு அமைவாக தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு கல்வி அமைச்சு எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர்கள் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவினால் பாடசாலைகளை நடாத்தும் முறை குறித்து திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

கொவிட் பரவலை தடுக்கும் வகையில் கடந்த 23 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டலுக்கு அமைய 50% மாணவர்களுடன் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.இதேவேளை மேலதிக வகுப்புக்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி நடவடிக்கைகளை தொடர அனுமதி மறுக்கப்பட்டுள்ளதோடு அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளையும் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...