மீண்டும் பாடசாலைகள் மூடப்படுமா? வெளியானது கல்வி அமைச்சின் தீர்மானம்.

Date:

நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை சில சுகாதார கட்டுப்பாடு விதிகளுக்கு அமைவாக தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு கல்வி அமைச்சு எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர்கள் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவினால் பாடசாலைகளை நடாத்தும் முறை குறித்து திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

கொவிட் பரவலை தடுக்கும் வகையில் கடந்த 23 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டலுக்கு அமைய 50% மாணவர்களுடன் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.இதேவேளை மேலதிக வகுப்புக்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி நடவடிக்கைகளை தொடர அனுமதி மறுக்கப்பட்டுள்ளதோடு அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளையும் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...