வை.எம்.எம்.ஏ(YMMA )யின் நாடளாவிய ரீதியில் நீர் விநியோகத் திட்டம் ஆரம்பம்.

Date:

இலங்கையில் தேசிய ரீதியில் இயங்குகின்ற மிகமுக்கியமான சமூக சேவை நிறுவனமான வை. எம். ஏ (YMMA) நாடளாவிய ரீதியில் நீண்டகாலமாக பல்வேறு சமூகப் பணிகளை இன, மத ,மொழி வேறுபாடின்றி மேற்கொண்டு வரும் ஒரு தொண்டு நிறுவனமாகும்.எனவே இந்த அடிப்படையில் மற்றுமொரு பொதுச் சேவை கட்டமாக தேசிய ரீதியில் நீர் விநியோகத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது

புத்தளம் மாவட்டத்தில் அனைத்து இலங்கை வை . எம்.ஏ (YMMA) அமைப்பின் அனுசரணையில் நாடு முழுவதும் நீர் விநியோகத் திட்டத்தின் ஆரம்ப கட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

கற்பிட்டிய பிரதேச செயலாளரினால் பரிந்துரைக்கப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களின் வீடுகளை வை.எம்.ஏ(YMMA) வின் தெரிவிக்குழு பார்வையிட்டது.இந்த மாநாட்டின் (YMMA) தேசியத் தலைவரான கே .என் டீன் பொருத்தமானவர்களை தெரிவு செய்வதற்காக புத்தளத்திற்கு விஜயம் செய்தார்.அத்தோடு இந்த திட்டம் வை.எம்.ஏ வின் (YMMA) ரமலான் மாதத்திற்கான விசேட திட்டங்களில் ஒன்றாகும் .இந் நிகழ்வின் போது புத்தளம் மாவட்டத்தின் வை.எம்.ஏ (YMMA) தலைவர் முஜாஹித் நிசார் குறித்த பயனாளர்களுக்கான நிதியை வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பாடசாலை அதிபர் என்.ஆர் . எம்.எம் முஹ்சி, வை.எம்.ஏ (YMMA) கற்பிட்டியின் தலைவர் இர்பான் ரிஸ்வான் ,மேம்பாட்டு அலுவலகர் ஜின்னா அஸ்மியா மற்றும் பள்ளிu நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

 

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...