ஹொரவ்பொத்தானயில் கடந்த 3 நாட்களில் 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

Date:

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 17  தொற்றாளர்கள் கடந்த 3 நாட்களில் ஹொரவ்பொத்தான பிரதேசத்தில் இனங் காணப்பட்டுள்ளதாக  சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஹொரவ்பொத்தான சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இன்று (26) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மூன்று பாடசாலை மாணவர்களும், மூன்று சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும், ஆசிரியர் ஒருவரும் அடங்குவதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஹொரவ்பொத்தான பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நமடவெவ பகுதியில் 8 பேரும், வெலிமுவபொத்தான பகுதியைச் சேர்ந்த 6 பேர் மற்றும் ஒலுகஸ்கடவெல பகுதியைச் சேர்ந்த மூவரும் இவ்வாறு அடையாளம்  காணப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் பரங்கியாவாடிய வித்தியாலயத்தின் பதினோராம் வகுப்பு மற்றும் நமடவெவ வித்தியாலயத்தின் இரண்டாம் வகுப்பு போன்றவற்றை தற்காலிகமாக மூட சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை அடையாளம் காணப்பட்டவர்கள் அனுராதபுரத்திலுள்ள மெத்சிறி செவன சிகிச்சை நிலையம் மற்றும் நொச்சியாகம மருத்துவமனையின் உள்ள சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி உள்ளதாகவும் ஹொரவ்பொத்தான சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
முஹம்மட் ஹாசில்

Popular

More like this
Related

புதிய திட்டங்களுடன் மக்கள் பணியை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம்- ஜனாதிபதி செயலாளர்

புதிய கருத்துக்கள் மற்றும் திட்டங்களுடன் ஜனாதிபதியின் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை...

முன்னாள் எம்.பி. சந்தன கத்ரியாராச்சி கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி கொழும்பு குற்றப் பிரிவினரால் (CCD)...

துருக்கியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்

துருக்கிக்கான இலங்கைத் தூதரகத்தின் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஒன்றிணைந்து, சிங்கள...

மாற்றியமைக்கப்பட்ட வாகனப் பதிவு எண்களை பயன்படுத்துவோருக்கு கடும் எச்சரிக்கை!

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்படும் வழக்கமான வாகனப் பதிவு இலக்கங்களுக்குப் பதிலாக,...