ராபிதா உலக முஸ்லிம் லீக்இன் புனித ரமழான் மாதத்திற்கான சமூகப் பணி ஆரம்பம்!

Date:

புனித மக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் “ராபிதாவின்”  உலக முஸ்லிம் லீக் அனுசரணையுடன் புனித ரமழானில் நாடு‌ முழுவதிலும் உலர் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.அந்த வகையில் இன, மத பேதமின்றி மூவின மக்களுக்கும் இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கப்படுகின்றன.

வறுமையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், கணவனை இழந்த பெண் குடும்ப தலைவிகளுக்கும் இவை வழங்கி வைக்கப்பட்டது.

மாளிகாவத்தை, வத்தளை,மாபோல, குருநாகல் போன்ற பிரதேசங்களில் இந்த பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.அத்தோடு தலா ஒரு குடும்பத்திற்கு ஆறாயிரம் ரூபா பெறுமதிமிக்க பொருட்கள் வழங்கி வருவதாகவும் இதுவரை 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்த பொதிகள் வழங்கப்பட்டதாக ராபிதா அமைப்பின் சமூக சேவை பிரிவின் இலங்கைக்கான பிரதிநிதி தேசபந்து இம்ரான் ஜமால்டீன் தெரிவித்தார்.இந்த உதவி வழங்கும் நிகழ்வில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...