`நாம் அபாயகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்!’ – சுட்டிக்காட்டும் எம்.பி சு.வெங்கடேசன்

Date:

திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு தினமும் விநியோகிக்கப்படும் ஆக்ஸிஜன் அளவு 5 மெட்ரிக் டன். ஆனால் தினமும் தேவையோ 7 மெட்ரிக் டன்.

`ஆக்ஸிஜன் பற்றாக்குறையில் நாம் அபாயகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்’ என்று அரசுக்கு எச்சரிக்கை செய்திருக்கிறார் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்.

தற்போது நாடுமுழுவதும் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் பற்றாக்குறையை பார்த்து ஒவ்வொரு மாநில மக்களும் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இதுபோன்ற சூழல் தமிழகத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை அறிக்கை மூலம் அரசுக்கு சுட்டிக் காட்டியுள்ளார் மதுரை எம்.பி சு.வெங்கடேசன்..

அதைப்பற்றி நம்மிடம் பேசும்போது, “தமிழகத்தின் மருத்துவ ஆக்ஸுஜன் உற்பத்தி திறன் 400 மெட்ரிக் டன். ஏப்ரல் மாத மத்தியில் நமது மருத்துவ பயன்பாட்டிற்கான ஆக்ஸிஜன் தேவை 240 மெட்ரிக் டன்னாக இருந்தது.

ஆனால், கடந்த சில நாட்களாக நமது தேவை 350 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. இது நாம் அபாயகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை காட்டுகிறது.

திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு தினமும் விநியோகிக்கப்படும் ஆக்ஸிஜன் அளவு 5 மெட்ரிக் டன். ஆனால் தினமும் தேவையோ 7 மெட்ரிக் டன்.

தர்மபுரி மாவட்டத்துக்கு தினமும் ஒரு மெட்ரிக் டன் விநியோகிக்கப்படுகிறது. ஆனால் அங்கு தேவையோ தினமும் 3 மெட்ரிக் டன்.

நாமக்கல் மாவட்டத்துக்கு தினமும் 6 மெட்ரிக் டன் விநியோகிக்கப்படுகிறது. ஆனால், அங்கு தேவையோ 10 மெட்ரிக் டன்.

திருச்சி மாவட்டத்துக்கு கடந்த ஒரு வாரத்தில் 10 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அங்கு தினசரி தேவையோ 5 மெட்ரிக் டன்.

தேனி மாவட்டத்துக்கு கடந்த ஒரு வாரத்தில் விநியோகிக்கப்பட்டுள்ள அளவு 5 மெட்ரிக் டன். ஆனால், அங்கு தேவையோ ஒரு வாரத்துக்கு 15 மெட்ரிக் டன்.

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கடந்த நான்கு நாட்களாக ஆக்ஸிஜன் விநியோகம் எதுவும் செய்யப்படவில்லை. ஆனால், அங்கு தினமும் ஒரு மெட்ரிக் டன் தேவைப்படுகிறது.

இப்படி, தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஆக்சிஜன் தேவையின் அளவு தினசரி கூடிக்கொண்டிருக்கிறது, பற்றாக்குறையின் அளவும் வேகமாக கூடுகிறது. தமிழக அரசிடம் இப்போது நாம் எதிர்பார்ப்பது கூடுதல் திட்டமிடலும், விரைவான செயல்பாடும்தான்” என்றார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...