சந்தையில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு!

Date:

சந்தைகளில் சமையல் எரிவாயுவுக்கும் ,12.5 கிலோகிராம் நிறை கொண்ட எரிவாயு கொள்கலன்களுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக கிடைக்கும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நுகர்வோர் சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நாட்டில் பல பாகங்களிலும் சுமார் 200 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதோடு , நுகர்வோர் சேவை அதிகார சபையின் கட்டளையை மீறி லிற்றோ நிறுவனத்தினால் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு கொள்கலனிற்கு பதிலாக 18 லீற்றர் அடங்கிய சமையல் எரிவாயு கொள்கலன்கள் சந்தைகளுக்கு தற்போது விநியோகிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, அந்த சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைகளில் இருந்து உடனடியாக அகற்றுமாறு நுகர்வோர் சேவை அதிகார சபை லிற்றோ நிறுவனத்திற்கு அறிவித்திருந்தது.எனினும்12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு கொள்கலனிற்கு பதிலாக 18 லீற்றர் நிறை கொண்ட எரிவாயு கொள்கலன்களே சந்தைகளில் இருப்பதாக நுகர்வோர் உட்பட விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...