சேதனப் பசளைக்கு மாறும் ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம் ரசாயனப் பசலைகள் திருப்பி அனுப்பப்பட்டன!

Date:

 

எதிர்வரும் காலங்களில் இரசாயனப் பசளைகள் பாவிப்பதில்லை என்றும் விவசாயிகள் சேதனப் பசளைக்கு திரும்ப வேண்டும் என்றும் ஜனாதிபதி எடுத்துள்ள முடிவின் காரணமாக சீனாவில் இருந்து தருவிக்கப்பட்ட சுமார் 18 ஆயிரம் மெட்ரிக் தொன் இரசாயனப் பசளைகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின்இந்த முடிவு ஒரு நல்ல முடிவாக இருந்தபோதிலும் உடனடியாக அது சாத்தியப்படுமா என விவசாய சமூகம் கேள்வி எழுப்பி உள்ளது. தற்போதைய நிலையில் பசளை தேவையை சேதனப் பசளைகளால் முழுமையாக பூர்த்தி செய்ய முடியுமா என்பது சந்தேகம் ஆனது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இது மட்டுமன்றி ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே ரசாயன பசலைகளை தருவிப்பதற்கான எந்த வசதிகளையும் கம்பெனிகளுக்கு வழங்க வேண்டாம் என்று வங்கிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் பிரகாரம் ரசாயன பசலைகளின் இறக்குமதி தற்போதைக்கு தடைப்பட்டுள்ளது. அதனை ஈடு செய்யும் அளவுக்கு சேதனப் பசளை நாட்டில் கையிருப்பில் உள்ளதா என்பது குறித்து விவசாயிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...