கொரோனா தொற்று எப்படி பரவுகிறது என்பது குறித்து புதிய தகவல்கள் | உலக சுகாதார அமைப்பு வெளியீடு

Date:

கொரோனா தொற்று எப்படி பரவுகிறது என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு சில வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது. காற்றில் அது பரவுவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையிலான மருத்துவம் நோயாளியின் உடலில் பரவிய கொரோனாவை குணப்படுத்தவில்லை. மாறாக அதன் அறிகுறிகளை வைத்து அதனைக் கட்டுப்படுத்தவே முயற்சிக்கப்பட்டு வருகிறது. இன்று வரை கொரோனா கண்ணுக்குத் தெரியாத எதிரியாகவே கருதப்படுகிறது.

முதல் அலையை விட இதன் இரண்டாம் அலை மேலும் ஆபத்தானதாகவும் கருதப்படுகிறது. ஒரு நோயாளிக்கு தான் எப்படி வைரசை பரப்புகிறோம் என்று தெரிவதில்லை.

கடந்த 2020 ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட வழிகாட்டல்களில் குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் தொற்று பரவுவதாகவும் இருமல் மற்றும் தும்மலின் போது தெறித்து விழும் நீர்த்துளிகளால் பரவுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அது இன்றளவிலும் நீடிக்கிறது.

இந்நிலையில் தற்போது உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டலின் படி காற்றிலும் கொரோனா தொற்று பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்பு புவியீர்ப்பு சக்தி காரணமாக காற்றில் நீண்ட தூரம் பரவாமல் வைரஸ் பூமியில் உதிர்ந்துவிடுவதாக கருதப்பட்டது. ஆனால் இப்போது வைரஸ் நீண்ட தூரம் காற்றில் பரவுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...