16 வயது பலஸ்தீன சிறுவன் இஸ்ரேல் படைகளால் மறைந்திருந்து சுட்டுக்கொலை

Date:

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலஸ்தீனத்தின் மேற்குக்கரை பிரதேசத்தில் உள்ள நப்லுஸ் கிராமத்தில் நேற்று இரவு 16வயது இளைஞர் ஒருவரை இஸ்ரேலிய படைகள் மூர்க்கத்தனமாக சுட்டுக் கொன்றுள்ளனர்.

கிராமத்துக்கு அருகில் உள்ள வீதி வழியாக இந்த சிறுவன் சென்றுகொண்டிருந்தபோது அங்கு மரம் ஒன்றின் கீழ் மறைந்திருந்த இஸ்ரேலிய படைவீரர்கள் அந்த சிறுவனின் பின்புறமாக சுட்டுள்ளனர். இரண்டு துப்பாக்கி ரவைகள் அவனுடைய பின்புறத்தை தாக்கிய நிலையில் செயிட் ஒபைத் என்ற அந்த சிறுவன் கீழே விழுந்துள்ளான்.

கொல்லப்பட்ட சிறுவன் செயிட் ஒபைட்
கொல்லப்பட்ட சிறுவன் செயிட் ஒபைட்

இந்த சம்பவம் கேள்வியுற்று அவனை காப்பாற்றுவதற்கு அம்புலன்ஸ் வண்டி ஒன்று சென்றபோது அதை குறிப்பிட்ட இடத்துக்கு செல்லவிடாமல் சுமார் 15க்கும் அதிகமான நிமிடங்கள் இஸ்ரேலிய படைகள் தடுத்து வைத்துள்ளனர். அதன் பின்னரே அந்த சிறுவன் அங்கிருந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு நப்லுஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளான்.

பலஸ்தீன சிறுவர்களை அதுவும் நிராயுதபாணியான சிறுவர்களை இஸ்ரேலிய படைகள் தொடர்ந்து இந்த பிரதேசங்களில் இவ்வாறு கொலை செய்து வருகின்றமை மிகவும் கண்டிக்கத்தக்கது என்று சிறுவர்களுக்கான பலஸ்தீன பாதுகாப்பு பிரிவு கவலை தெரிவித்துள்ளது .

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...