மதுபான விற்பனை நிலையங்களை மூடுங்கள்! – ஜனாதிபதியிடம் மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை

Date:

இலங்கையிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், புகைப்பிடிக்காதபடி மக்களை ஊக்குவிப்பதற்கும், மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுவதற்கும் முன்வருமாறும் ஜனாதிபதியிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்திய நிபுணர் ஷெனால் பெர்னாண்டோ கருத்துத் தெரிவிக்கையில்,

“நாட்டில் கோவிட் வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கும், புகைப்பிடிப்பதைத் தடுப்பதற்கு அதனுடன் தொடர்புடைய அனைத்துக் கடைகளையும் உடனடியாக மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும். மேலும், இது கோவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவும் உதவும். மக்கள் மதுபானங்களை வாங்குவதற்கும், புகைப்பிடிப்பதற்கும் அல்லது அவற்றை உட்கொள்வதற்கும் பல இடங்களில் ஒன்று கூடுவார்கள்.

அவர்களில் பெரும்பாலானோர் வீடுகளில் நடைபெறுகின்ற விருந்துபசார நிகழ்வுகளில் கலந்துகொண்டு அங்கே ஒன்றுகூடுவார்கள்.

தற்போது கோவிட் வைரசுக்கு எதிராக நாடு போராடி வரும் சூழ்நிலையில், அந்தப் பழக்கங்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை” எனத் தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும், முன்னதாக கோவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மாலை 6 மணியுடன் மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ராஷித் அல்-கன்னூசியின் உடல்நிலை குறித்து சர்வதேச முஸ்லிம் உலமாக்கள் ஒன்றியம் கவலை: துனிசிய அரசிற்கு கோரிக்கை!

துனிசியாவின் மூத்த அரசியல் தலைவரும், பிரபல இஸ்லாமிய அறிஞருமான ஷேக் ராஷித்...

முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கை முன்னேற்றம்

முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை தொடர்பில் வேகமாக முன்னேறி வரும்...

சுரேஷ் சலேயின் ரிட் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச்...

இன்று முதல் தென்மேற்குப் பகுதியில் மழை அதிகரிக்கும்!

இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சி...