ரஷ்யாவில் இருந்து சுமார் 6 லட்சம் ஸ்புட்னிக் தடுப்பு மருந்துகள்!

Date:

ரஷ்யாவில் இருந்து சுமார் 6 இலட்சம் ஸ்புட்னிக் தடுப்பு மருந்துகள் அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்குள் இலங்கையை வந்தடையும் என்று இராஜாங்க அமைச்சர் வைத்திய கலாநிதி சுதர்ஷினி பெர்னானடோபுள்ளே தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த 4 ஆம் திகதி 15 ஆயிரம் தடுப்பூசிகள் இலங்கைக்குக் கிடைத்துள்ளன. இந்த தடுப்பூசி தொகுதிகள் கழற்றப்பட்டதும் இரண்டு மணி நேரங்களுக்குள் உரியவர்களுக்குச் செலுத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இதுவரை 11 ஆயிரத்து 334 பேருக்கு இந்தத் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன. தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் கொழும்பு, கொத்தெட்டுவ, மற்றும் கொலன்னாவ மருத்துவ அதிகார பிரதேசங்களில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...