நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் பாதிப்பு!

Date:

கினிகத்தேனை பகுதியில் பெய்த பலத்த மழைக் காரணமாக பொல்பிட்டிய மாதெனியாவத்த பகுதியிலுள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.

இதனால் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தாய் மற்றும் அவரது மகள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

 

அத்துடன் நாப்பாவல, தல்தூவ, தெஹியோவிட்ட உள்ளிட்ட கிராமங்களும் நீரில் மூழ்கின அத்துடன் களனி நதி பெருக்கெடுப்பு காரணமாக சீதாவக, தல்தூவ, மாகம்மன, தெஹியோவிட்ட மற்றும் நாப்பாவல ஆகிய கிராமங்களில் தாழ்வான பகுதிகள் தற்போது நீரில் மூழ்கியுள்ளதாக குறித்த பிரதேசத்தின் ஊடகவியலாளர் ஷபீர் முஹம்மத் தெரிவித்திருந்தார்.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக அத்தனகல்ல ஓயாவை அண்டிய திஹாரிய – தூல்மலை பிரதேசத்தின் சில பகுதிகளும் இன்று (14) வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு

மள்வானையில் களனி கங்கையினை அண்மித்த தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

முஸ்லிம்களின் உலகத்துக்கு மணிமகுடமாக இருப்பது பலஸ்தீனம்.அதை விட்டுவிடாதீர்கள்”: அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு!

காசாவில் இப்போது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவை முழுமையாகக் கட்டுப்படுத்த...

கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA )மாநாட்டு மண்டபம் ஏறாவூரில் திறந்து வைப்பு!

ஏறாவூரில் அமையப் பெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் EASCCA மாநாட்டு...

சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய மிக உன்னதமான செய்திகள் இக்கண்காட்சி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது; மௌலவியா ஜலீலா ஷஃபீக்!

மாவனல்லையில் இயங்கி வருகின்ற மகளிருக்கான உயர் கல்வி நிறுவனமான ஆயிஷா உயர்...

சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை சார்பில் வெலிகம மத்ரஸதுல் பாரி மாணவன் பங்கேற்பு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சவுதி அரேபியா தூதரகமும் இணைந்து கடந்த...