எவன்காட் வழக்கில் இருந்து நிஸ்ஸங்க சேனாதிபதி உட்பட 8 பேர் விடுதலை!

Date:

எவன்கார்ட் நிறுவன மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை வழக்கில் இருந்து எவன்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உட்பட பிரதிவாதிகள் 8 பேரையும் விடுதலை செய்ய கொழும்பு விஷேட நீதாய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆதித்ய பட்டபெதிகே, மஞ்சுல திலகரத்ன மற்றும் மஹேன் வீரமன் ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சட்டவிரோதமான முறையில் ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்களை வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் சட்டமா அதிபரினால் கொழும்பு விஷேட நீதாய நீதிமன்றத்தில் எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உள்ளிட்ட 8 பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...