சிறுவர்கள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

Date:

தற்போதைய பயணத் தடையை அடுத்து சிறுவர்களை வீடுகளுக்கு உள்ளேயே தங்க வைப்பது சிறந்தது எனவும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு வரும் வாகனங்களுக்கு அருகில் அவர்களை அழைத்து செல்ல வேண்டாம் எனவும் பொரளை ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் டொக்டர் தீபால் பெரேரா, பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

மரக்கறி, பழ வகைகள், உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வாகனங்கள் வீட்டிற்கு அருகில் வருகை தரும் போது, அந்த வாகனங்களுக்கு அருகில் சிறுவர்கள் செல்வது வழக்கம் என அவர் குறிப்பிட்டார்.

 

இவ்வாறு வருகை தரும் வாகனங்களுக்கு அருகில், சிறுவர்கள் செல்வதற்கு இடமளிக்க வேண்டாம் என கூறிய அவர், குறித்த வாகனங்களுக்கு அருகில் வீட்டிலுள்ள பெரியவர்களை மாத்திரம் செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

 

பொருட்களை கொள்வனவு செய்ததன் பின்னர், உடனடியாக வீட்டிற்குள் அவற்றை கொண்டு செல்ல வேண்டாம் எனவும், வீட்டிற்கு வெளியிலேயே வைத்து, அவற்றை கழுவி வீட்டிற்குள் கொண்டு செல்லுமாறும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

 

இதேவேளை, 2 வயது முதல் 15 வயது வரையான அனைத்து சிறுவர்களுக்கும் கட்டாயம் முகக் கவசத்தை அணிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...