நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

Date:

கடும் மழையுடனான வானிலை இன்றுடன் குறைவடைகின்ற போதிலும் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ளதால் நாட்டில் உள்ள பெரும்பாலான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் சற்று குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளில் 4 வான் கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.

எனவே, தெதுருஓயாவிற்கு அருகில் வாழும் மக்கள் அது குறித்து அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது நிலவும் வெள்ளப்பெருக்கு நிலை படிப்படியாகக் குறைவடையக்கூடும் எனவும் நீர்ப்பாசன திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...