அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலை குறைப்பு-விசேட கலந்துரையாடல்!

Date:

பல அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளை நாளை 10ஆம் திகதி முதல் குறைத்து அந்த விலைகளை ஒரு வருடத்துக்கு நிலையானதாக வைத்திருக்க உள்ளூர் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

அம்பாந்தோட்டை உப்பு உற்பத்தி நிலையத்தைப் பார்வையிட்ட பின் அமைச்சர் ஊடகங்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

அண்மைய நாட்களில் பெரும் உப்பு பற்றாக்குறையை நாட்டில் ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதுடன் ஒரு கிலோ உப்பின் விலையை 100 ஆக அதிகரிக்கும் முயற்சியும் இடம்பெறுகிறது. நாட்டுக்குத் தேவையான அளவு உப்பு எம்மிடம் உள்ளது. அரசாங்கம் தவிர தனியார் துறையினராலும் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இலங்கை இப்போது உப்பை ஏற்றுமதி செய்யும் நாடாகவும் மாறியுள்ளது என்றார்.

Popular

More like this
Related

‘சமநீதி’ மாதாந்த சஞ்சிகை வெளியீட்டு விழா நாளை கொழும்பில்

'சமநீதி' (Equity) என்ற பெயரிலான புதிய மாதாந்த சஞ்சிகையொன்று இம்மாதம் முதல்...

‘சிசு செரிய’ சேவையை மேலும் விரிவுபடுத்த அரசாங்கம் தீர்மானம்!

பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவையை முறைப்படுத்துவது தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு...

மலேசியாவின் பகாங் மாநிலத்தில் புனித குர்ஆன் பல்கலைக்கழகம் உருவாக்கம்: சுல்தான் அப்துல்லா வரலாற்று அறிவிப்பு!

மலேசியாவின் பகாங் (Pahang) மாநிலத்தில் குர்ஆனியக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில், 'புனித...

சாரதி அனுமதிப் பத்திர விண்ணப்பதாரர்களில் 8% பேருக்கு உடல்நலக் குறைபாடு.

இலங்கையில் சாரதி அனுமதிப் பத்திரம் (Driving License) கோரி விண்ணப்பித்தவர்களில் சுமார்...